Saturday, January 25, 2014

எல்லா பதிவர்களுக்கும் எனது நிலை தானா ?

கடந்த சில நாட்களாக,
எனது வலை நண்பர்கள் எழுதும் பதிவுகளுக்கு நான் போடும் பின்னூட்டங்கள் வெளியாவதில்லை.

முதலில் இதை நான் வலை நண்பர்கள் மட்டறுத்தல் அதாவது moderation of comments என்று நினைத்து இருந்தேன்.

வீடு திரும்பல் மோகன் குமார் அவர்களின் உயில் என்னும் பதிவில் எனது பின்னூட்டங்கள், வெளியாகவில்லை.  பின், வலைச்சரத்திலே எனது வலை அறிமுகம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒன்று இட்டதும், காணாமற் போன கனவுகள் என்ற பதிவிலும் நான் இட்ட பின்னூட்டங்களும் காணாமற் போய்விட்டன.

எல்லா பதிவர்களுக்கும் எனது நிலை தானா ?


நேற்று, எனது வலைப்பதிவு www.subbuthatha72.blogspot.in பின்னோட்டம் அளித்திருந்த பலருக்கு பதில் போடவும் முடியவில்லை.  திரு.ஆவி. திருமதி கீத மஞ்சரி, திரு துரை செல்வராஜ், திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் இட்ட பின்னூட்டங்களுக்கு நான் நன்றி சொல்ல முடியவில்லை.

எனது வலை கூகிள் + இணைத்திருப்பதால் இந்த பிரச்னை என்று சொல்லவும் முடியவில்லை.

ஆயினும், கூகிள் + இணைந்தவர்கள் தான் கூகிள் + இணைந்தவர்கள் வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டம் அளிக்க இயலும் போல தோன்றுகிறது.
ஒருவர் கூகிள் + இனையாவிடினும் பின்னோட்டம் இடவோ அல்லது பின்னூட்டத்திற்கு தமது வலையிலே பதில் சொல்லவோ முடியாது எனவும் தெரிகிறது.

இந்த பிரச்னைக்கு   எதாவது தீர்வு இருக்கிறதா என கூகிள் லே தேடினால்,
ஒருவர் சொல்கிறார்: இது ப்ரௌசர் பிரச்னை.  அதாவது, பயர் பாக்ஸ் உபயோகித்து நான் வலைக்குள் சென்றால், கூகிள் கறோம் ஐ அல்லது எக்ஸ்ப்ளோரர் உபயோகித்து வலைப்பதிவு செய்தவர் பதிவுக்கு பின்னோட்டம் இடம்முடியாது என்று.

இது அவ்வளவு சரியான பதில் எனச் சொல்ல இயலவில்லை.

இது பற்றி, குறிப்பாக, வேலன் அவர்கள், திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கருத்து தெரிவித்தால் நல்லது.

கூகிள் ப்ளஸ் இருந்து வெளியேறினாலும் இந்த பிரச்னை தீராது என்றே தெரிகிறது.

மற்றும், இந்த பிரச்னை எனக்கு மட்டும்தானா , இல்லை, மற்றவர்களுக்கும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

எனக்கே இப்படி என்றால்,
தினசரி ஒரு நூறு கமெண்ட்ஸ் போடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்வார்கள். ?

பெருமாள் காப்பாத்துவார் .

இருந்தாலும்,

எனக்கு ஒரு உண்மை தெரியனும்ங்க்.

4 comments:

  1. கூகுள் ப்ளசிலிருந்து வெளியேறுவது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. /// கூகிள் + இணைந்தவர்கள் தான் கூகிள் + இணைந்தவர்கள் வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டம் அளிக்க இயலும் போல தோன்றுகிறது. ஒருவர் கூகிள் + இனையாவிடினும் பின்னோட்டம் இடவோ அல்லது பின்னூட்டத்திற்கு தமது வலையிலே பதில் சொல்லவோ முடியாது எனவும் தெரிகிறது.... ///

    மேலும் பலவற்றை அறிய : Google+ Comments Box பயன்படுத்தலாமா...?

    Link : http://www.tamilcc.com/2013/04/google-comments-box.html

    ReplyDelete
  3. சரி தீர்வு தான் என்ன...? நீங்கள் உங்களின் Blogger A/c-ல் இருக்கும் போது கீழ் உள்ளது போல், மற்றொரு tab-ல் டைப் செய்து என்டர் (↵) தட்டவும்...

    http://www.blogger.com/revert-profile.g

    அடுத்து தோன்றுவதில் "ப்ளாக்கரின் சேவைகளையே போதும்" என்பதை சொடுக்குங்கள்...

    அடுத்து தோன்றும் கட்டத்தில் "About me" அல்லது "என்னைப் பற்றி" என்று டைப் செய்து "OK" செய்யவும்... இப்போது உங்கள் தளத்தில் g+ கருத்துரைப் பெட்டியும் இருக்காது... உங்களின் Profile-லும் Blooger Profile-யாக மாறி இருக்கும்...

    Example : எனது தளத்தில் ஆரம்பத்தில் உள்ள "வாங்க" (Home Page) பக்கத்தில் உள்ள "பேச / பழக" (Profile Page) உள்ளது போல...

    நீங்களும் உங்களின் Profile பக்கத்தை சொடுக்கி, Edit Profile என்பதை சொடுக்கி, உங்களது விவரங்களை கொடுத்து சேமிக்கவும்... எந்தெந்த விவரங்கள் உலகத்திற்கு தெரிய வேண்டும் என்பது உங்களின் விருப்பம்...!

    மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

    பொன். தனபாலன்
    09944345233
    dindiguldhanabalan@yahoo.com

    ReplyDelete
  4. /// வீடு திரும்பல் மோகன் குமார் அவர்களின் உயில் என்னும் பதிவில் எனது பின்னூட்டங்கள், வெளியாகவில்லை. பின், வலைச்சரத்திலே எனது வலை அறிமுகம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒன்று இட்டதும், காணாமற் போன கனவுகள் என்ற பதிவிலும் நான் இட்ட பின்னூட்டங்களும் காணாமற் போய்விட்டன. ///

    இது உங்களின் தவறு இல்லை... நீங்கள் இட்ட பின்னூட்டங்கள் அந்தந்த தளங்களின் Comments --> Spam--> பகுதில் இருக்கும்... பலரும் இதைப் பார்ப்பதில்லை... ஒரு முறை அந்த கருத்துரைகளை எல்லாம் மொத்தமாக சொடுக்கி "Not Spam" என்று சொடுக்கி விட்டால், கருத்துரைகள் spam பகுதிக்கு செல்லாது... உங்களின் தளத்தில் கூட Check செய்து பாருங்களேன்...

    நன்றி...

    ReplyDelete